இயேசு கிறிஸ்துவின் வருகை சீக்கிரமாக இருக்கிறது. அதற்கு ஆயத்தம் உள்ளவர்களாக நாம் கிறிஸ்துவின் பாதையிலே செல்ல வேண்டியவர்களாக இருக்கிறோம். வீணான அசுத்தமான காரியங்களை எங்கள் வாழ்வை விட்டு அகற்றிக் கொள்ள வேண்டியவர்களாக நாங்கள் இருக்கிறோம்.
நாம் கிறிஸ்துவைப் பின்பற்றி கிறிஸ்துவை போல வாழ வேண்டும் அவர் நமக்கு அளித்த கட்டளைகளை பின்பற்றுவதன் மூலம் நாம் அவரை மதிக்கிறோம். இயேசு உலகில் வாழ்ந்தார். அவருடைய வாழ்க்கை சரித்திரத்தில் இடம் பெற்றுள்ளது. அவர் உயிர்த்தெழுந்தார். அவர் மீண்டும் வருவார்.
உலகில் நடைபெறாத ஒன்று வேதாகமத்தில் எழுதப்பட்டிருக்கவில்லை. நிச்சயமாக நடந்தவைகளை கண்ணால் கண்டவர்கள் தெளிவாக வேதாகமத்தில் எழுதியிருக்கிறார்கள் சாட்சி கூறி இருக்கிறார்கள். நிச்சயமாக அவர்கள் பார்த்தவர்களை இயேசுவின் மூலமாக அவைகளை கேட்டு எமக்கு அறியத் தந்திருக்கிறார்கள்
நாங்கள் தந்திரமான கட்டுக்கதைகளைப் பின்பற்றினவர்களாக அல்ல, அவருடைய மகத்துவத்தைக் கண்ணாரக் கண்டவர்களாகவே நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வல்லமையையும் வருகையையும் உங்களுக்கு அறிவித்தோம்.
II பேதுரு 1:16
No one has commented yet. Be the first!