இயேசு தன் உயிரை தர மானிடனானார்.
அது அவர் சித்தமாய் காட்டினார்.
அவர் நமக்காய் வந்தார் என்றறிந்தோர்
வசனத்தினை கேட்பதற்காய் விரைந்தார்.
தம் பெயர் மறைவதை உணர்ந்தோராய்
பரிசேயர் அவரை பகைத்தார்.
மக்கள் முன் தலைவரானார்
மனம் விரும்ப விருந்தும் அளித்தார் இயேசு
தருணம் வர காட்டியே கொடுத்தார்
இறைமகன் இயேசு கைதானார்.
மக்கள் தலைவரால் சிலுவை எடுத்தார்
மனம் பதைத்தவரும் கைவிட்டு ஓடினர்.
தனியே சுமந்தார் பார சிலுவை
தவித்தே சரீரத்தை ஒப்புக் கொடுத்தார்,
சிலுவையில் அறைந்தார்
இயேசுவின் உயிரை பறித்தார்.
மரித்தவர் கல்லறையினின்று எழுந்தார்
கொன்றவர் திகைத்து நின்றார்.
உயிர்த்த உடலை காட்டி
நிம்மதியாய் வாழச் சொன்னார்
விடைபெற்றார் 2000 வருடத்திற்கு முன்
பரலோகம் சென்று மீண்டும் வருவார்.
அரசனாய் ஆள்வார் உலக மக்களை
காண்பாய் அவர் ராஜ மகிமையை.
(பரலோகிலிருந்து உலகில் பிறந்து வந்து, அற்புதம் செய்து மரித்து பின் உயிரோடழுந்து பரலோகம் சென்ற இயேசு கிறிஸ்து இராஜாதி இராஜனாய் திரும்ப உலகினை ஆளுகை செய்ய வரப்போகின்றார்.)(அரசன் இயேசு வர முன்னே அவரிடம் சேர வேண்டும், இல்லாவிட்டால் நித்திய தண்டனை தரப்படும்.)
No one has commented yet. Be the first!