Fear God and keep his commandments,for this is the duty of all mankind.For God will bring every deed into judgment, including every hidden thing, whether it is good or evil.
தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே.ஒவ்வொரு கிரியையையும், அந்தரங்கமான ஒவ்வொரு காரியத்தையும் நன்மையானாலும் தீமையானாலும், தேவன் நியாயத்திலே கொண்டுவருவார்.
දෙවියන්ට ගරුබිය දක්වා, එතුමන්ගේ ආඥා පිළිපදින්න. මිනිසා මවන ලද්දේ ඒ සඳහා ය. අපේ සියලු රහස් හොඳ හෝ නරක හෝ වේ වා දෙවියන් වහන්සේගේ විනිශ්චයයට භාජනය වනු ඇත. Ecclesiastes பிரசங்கி 12:13-14 ධර්මදේශකයා
1 / 3
Tamil christian
2 / 3
Tamil Christian
3 / 3
Tamil Christian

Wednesday, August 02, 2023

விளம்பரங்கள் www.Tamil.bid ல் வெளியிடல்

https://www.Tamil.bid ல் விளம்பரங்களை வெளியிடுவதற்கு தொடர்புகளுக்கு ஈமெயில் mailto:ad@tamil.bid 

வட்சப் 
free advertisements on www.tamil.bid whats app groups   01 - 02 - 03 - 04 - 05 -  06 - 07  - 08 -  09 

youtube official-Tamil-Bid  facebook tamil - wwwTamilbid - life-partner - clj2c 

Contact / WhatsApp: +94775076775, PayPal / Email: admin@tamil.bid

Tuesday, August 01, 2023

உலகின் ஆச்சரியமான செய்திகள் Amazing news of the world

help

உதவி

இலங்கை தமிழ் கிராமங்களில் உள்ள தமிழ் மக்களுக்கு சேவை நோக்கில் மிதிவண்டிகள் / சைக்கிள் வழங்கிட தேவையான நிதிவசதிகளை எதிர்பார்த்துள்ளோம். வசதி படைத்தவர்கள் உங்களாலான நிதியை எமக்கு தந்துதவுமாறு கேட்டு நிற்கின்றோம். மேலதிக விபரங்களுக்கு வட்சப் https://wa.me/message/VMCMGXKGNF23E1 இனை தொடர்புகொள்ளுமாறு தயவுடன் கேட்கின்றோம்.

https://www.tamil.bid/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5

Monday, September 06, 2021

மூளை சலவை செய்யப்படும் அப்பாவிகள் ஏனையவர்களுக்கு ஆபத்தானவர்கள்


மூளை சலவை செய்யப்படும் அப்பாவிகள் ஏனையவர்களுக்கு ஆபத்தானவர்கள்

உலகில் இவ்வாறானவர்கள் மிகப் பெரும் பயங்கரவாதிகளாக உருவாகிக் கொண்டு வருகின்றனர்.

இவர்களுக்கான மனநல மருத்துவ வசதிகளை அரசாங்கங்கள் செய்து கொடுப்பது சிறந்தது,

Friday, August 20, 2021

கடைசி வரை இயேசு

வீடுவரை.. வீதிவரை.. காடுவரை.. கடைசிவரை நம்மோடு இருப்பவர் இயேசு ஒருவர் மட்டும்தான். 

நாம் எப்போதும் நமக்கு துணையாக ஒருவர் இருக்க வேண்டும் என்று எப்போதும் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

ஆனாலும் பல சந்தர்ப்பங்களில் நமக்கு துணையாக இருக்க வேண்டிய தாக நாங்கள் நினைத்தவர்கள் நமக்கு துணையாக இருப்பது இல்லை.

இதனால் பல மன உடைவுகள் நமக்கு ஏற்படலாம்.

எப்போதும் நமக்கு துணையாக நம்மோடு இருப்பவரை நாம் எண்ணிப் பார்ப்பதில்லை. 

நம்மை எப்போதும் நினைத்து நமக்கு துணையாக இருப்பவர் நம்மை உருவாக்கிய இயேசு கிறிஸ்து எனும் இரட்சகரே.

இயேசு கிறிஸ்து என்னும் இரட்சகர். நம்மை ஒருபோதும் கைவிட்டு விடுவதில்லை. 

நமது மரணத்தின் பின்னும் நமது அரசராக இயேசு கிறிஸ்து என்னும் இரட்சகர் சிங்காசனத்தில் வீற்றிருந்து நம்மை ஆளுகை செய்வார்.

Friday, June 04, 2021

தமிழ் மொழிக்கு அளப்பரிய சேவைகள் ஆற்றிய கிறிஸ்தவர்கள்

மிகப்பெரும் பழமையான கிறிஸ்தவர்களின் வேதாகமத்தை அதாவது யூதர்களின் பழம்பெரும் புனித நுாலை பழங்கால தமிழுக்கு மொழிபெயர்த்து தமிழ் மொழிக்கும் கிறிஸ்தவர் மற்றும் யூதருக்கும் பெருமை சேர்த்துள்ளது இந்த விடயம்.
தமிழ் மொழி கற்ற வேத நுால் அறிஞர்களின் முயற்சியாலேயே வேதாகமம் இன்று தமிழ் மொழியில் கிடைத்துள்ளது. தமிழின மக்களுக்கு சுய முயற்சியால் வேதாகமத்தை தமிழ் மொழியில் தந்தவர்களுக்கு இதை விட வேறு எதனாலும் பெருமை கிடைக்குமா?

Monday, May 24, 2021

இரண்டு அழிக்கப்பட்ட யூத ஆலயங்கள் இருந்த எருசலேமில் புதிதாக நுழைந்த கூட்டம் தான் பாலஸ்தீனர்கள் எனப்படும் அரபி தேசத்தால் ஊக்கமளிக்கப்படும் கூட்டம். அவர்களுக்கு முன் வந்த அரபிய ஆளுகைக்குள் கட்டப்பட்டது தான் இப்பள்ளிகள். இப்பள்ளிவாயல்கள் வர முன்னமே இரண்டு யூத ஆலயங்களின் வரலாற்றை மாற்றியமைப்பதில் அரபிக்களால் கைவிடப்பட்ட பலஸ்தீனர்கள் உலகை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனர்.


இரண்டு அழிக்கப்பட்ட  யூத ஆலயங்கள் இருந்த எருசலேமில் புதிதாக நுழைந்த கூட்டம் தான் பாலஸ்தீனர்கள் எனப்படும் அரபி தேசத்தால் ஊக்கமளிக்கப்படும் கூட்டம். அவர்களுக்கு முன் வந்த அரபிய ஆளுகைக்குள் கட்டப்பட்டது தான் இப்பள்ளிகள். இப்பள்ளிவாயல்கள் வர முன்னமே இரண்டு யூத ஆலயங்களின் வரலாற்றை மாற்றியமைப்பதில் அரபிக்களால் கைவிடப்பட்ட பலஸ்தீனர்கள் உலகை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனர்.

Friday, May 21, 2021

உங்களுக்கு இலகுவான வெப்சைட் இணையத்தளம்

பலவிதங்களில் வெப்சைட் உருவாக்கிட
பல விளம்பரங்களை வெளியிட
தியானத்திற்கு ஒரு இணையத்தளமா
ஜெபத்திற்கு ஒரு இணையத்தளமா
யூடியுப் லிங்குகளை இணைத்து அழகுபடுத்தலாம்
சபை செய்திகளை நீங்களே வெளியிடலாம் 
உங்களுக்கென இலகுவான முறையில் 
மிக மிக இலகுவாக மாற்றியமைக்கலாம்
பேஸ்புக் பதிவுகளை சேர்க்கலாம்
படங்களை இணைத்து மகிழலாம்
உங்களுக்காக ஒரு இணையத்தளம்
மிக இலகுவான பெயர்களோடு
church . Tamil.bid
mission . Tamil.bid
housechurch . Tamil.bid
church4you . Tamil.bid
churchlk . Tamil.bid
churchuk . Tamil.bid
churchbuilding . Tamil.bid
மிக இலகுவான பெயர்களோடு
mary . Tamil.bid
sara . Tamil.bid
Jesus . Tamil.bid
Peter . Tamil.bid
site . Tamil.bid
Your-name . Tamil.bid
வட்சப் +972508705005
மெயில் admin@Tamil.bid 
wwwtamilbid@gmail.com 

சாவை எண்ணி பயப்படுகின்றோமா? வாழ்வதற்கு போராடுகிறீர்களா? மரணம் வேண்டாம் என்கிறீர்களா?

எமது வாழ்வும் மரணமும் யார் கையில் உள்ளது? எங்கள் கையிலேயே உள்ளதா? நாம் செய்ய வேண்டியது என்ன? 


Tuesday, May 11, 2021

தயவுசெய்து எல்லா குரூப்பிலும் பகிரவும். இஸ்ரவேல் தேசத்தை தற்போதைய நிலைமையை பார்த்து ஆசீர்வாதம் பெறுங்கள். இந்த இணைப்பை பாருங்கள் - https://ISRAEL.Tamil.bid மிகவும் அருமையான தளம். கடவுள் நம்மை தமது தேசத்தை காண வைத்த கண்கள் பாக்கியமுள்ளது. ஆமேன்.

தயவுசெய்து எல்லா குரூப்பிலும் பகிரவும்.
இஸ்ரவேல் தேசத்தை தற்போதைய நிலைமையை பார்த்து ஆசீர்வாதம் பெறுங்கள். இந்த இணைப்பை பாருங்கள் - https://ISRAEL.Tamil.bid மிகவும் அருமையான தளம். கடவுள் நம்மை தமது தேசத்தை காண வைத்த கண்கள் பாக்கியமுள்ளது. ஆமேன்.


Monday, May 03, 2021

மனிதருடன் சமூக இடைவெளி பேணவும், ஆனால் இறைவனுடன் அல்ல

உலகமே இன்று பயத்தின் கரங்களுக்குள் புகுந்துள்ளது. 
காரணம் என்ன? 
கண்களுக்கு மறைவான நோய்த் தொற்று பரவிக் கொண்டிருக்கின்றது.
நன்றாக இருந்தவர்கள் மரித்துப் போகிறார்கள்.
நேற்று இருந்தவர்களில் பலர் இன்று இல்லை.
ஆகவே மனிதர் சமூக இடைவெளி பேண அறிவுறுத்தப்படுகின்றனர்,
அதனால் கிடைக்கும் நன்மை என்ன?
இயலுமான அளவு நோய் தொற்று அணுகாது,
பரவும் தன்மை குறையும் என்பதினால் சமூக இடைவெளி பேண மக்களுக்கு அறிவுறுத்தல் கொடுக்கப்படுகின்றது.
உண்மையிலேயே மனிதர் குறித்த துாரம் ஒருவருக்கொருவர் தள்ளி நின்று செயற்பட வேண்டியதாகி விட்டது. 
உற்ற நண்பர்கள் கூட சேர்ந்து இருக்க முடியாதென உலகம் சட்டம் போட்டு விட்டது.
ஆனாலும் மனிதருக்குத்தான் இச்சட்டம்.
இறைவனோடு அல்ல.
இறைவனிடம் கிட்டிச் சேர வேண்டும்,
ஒருபோதும் இறைவனின் பாதத்திலிருந்து இடைவெளி விட்டுச் செல்ல வேண்டாம்.
ஏதோ ஒரு திட்டத்துடன் அனுமதியுடன் தான் கொரனாவின் கால எல்லை வகுக்கப்பட்டுள்ளது.
இறைவனுடன் இணைந்து வாழ்வோம்.
உலகை படைத்த இறைவனை போற்றுவோம்.
இறைவன் பாதம் சேருவாேம்.
மனிதருடன் சமூக இடைவெளி பேணுவோம். இறைவனுடன் அல்ல.

Tuesday, April 27, 2021

உலக பணம் படைத்த நாடுகளின் பட்டியலில் உலகில் முதன்முறையாக யூத நாடான இஸ்ரேல்

முழு உலகின் கவனமும் இஸ்ரேல் பக்கம் திரும்பியுள்ளது. உலகில் தன்னிறைவு அடைந்த நாடுகளின் வரிசையில் இஸ்ரேல் முன்னேறி வருகின்றது,
இதன் காரணமாக இஸ்ரேல் உலக பணக்கார வசதி படைத்த நாடுகளின் பட்டியலில் இடம்பிடித்து அந்நாட்டை உலகமே திரும்பிப் பார்க்கும் வண்ணம் செய்துள்ளது,
இவ்வாறு பட்டியலில் தற்போது 19 ஆவது இடத்தில் இஸ்ரேல் தனது வரவை நிலைநாட்டியுள்ளது,


Monday, March 08, 2021

இக்காலத்து சபை மக்கள் அக்காலத்து யோனாவின் மக்களை பார்க்கிலும் மிகவும் கெட்டவர்களா ?

நாங்கள் ஏன் வேறு சபை மக்களை மிக தாழ்வாக பார்க்கிறோம் ?


நாங்கள் ஏன் வேறு சபை மக்கள் என பிரித்து பார்த்து பழக தயங்குகிறோம்?


நமது சபை மக்களுடன் மாத்திரமே நமது உறவு தொடர்ந்து இருந்து வருகிறது. வேறு சபை மக்களுடன் பழகத் தயங்குகிறோம்.


ஏன் நமக்கு இவ்வாறான சிந்தனை வருகிறது.  மற்ற சபை மக்கள் எமது பார்வையில் கீழாக காணப்படுகிறார்கள் .


நமது உறவு நமது சபை மக்கள் மீது மட்டுமே காண்பிக்கப்படுகிறது. ஏனைய  சபை மக்களோடு  நாம் உறவு கொள்ள மறுத்து விடுகிறோம். 


எமது சபை பாரம்பரியங்கள் சம்பிரதாயங்கள் பழக்கவழக்கங்கள் கொண்டவர்களை மாத்திரம் ஏற்றுக்கொள்கிறோம்.


அன்று யோனா குறிப்பிட்ட மக்களுக்கு நற்செய்தி அறிவிப்பதற்கு புறப்பட்டு சென்ற போதும் அவனது எண்ணம் இதே விதமாகவே காணப்பட்டது. 


அவர்கள் தனக்கு உரியவர்கள் அல்ல என்பது போல அவன் செயல்பட்ட விதத்தை நாங்கள் காண்கிறோம். 


எப்படிப்பட்ட ஆளாக இருந்தாலும் மக்கள் எப்படிப்பட்டவர் காணப்பட்டாலும் அவர்களை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் இருக்கவில்லை


ஆனால் கர்த்தராகிய இறைவன் அவர்களை நேசிப்பதை காணக்கூடியதாக இருக்கிறது.  அவர்களை நேசிக்கிறார் அவர்கள் அவருடைய நற்செய்தியை கேட்பதற்கு அவர் விரும்புகிறார்.


யோனாவை போன்ற எண்ணம் கொண்டவர்களாக நாங்கள் மக்களை ஒதுக்கி வைத்துக் கொண்டிருக்கிறோம். 


ஆனால் இறைவன் அந்த மக்களை தம் பக்கமாக சேர்ப்பதற்கு விரும்பி கொண்டிருக்கிறார்


அந்த இறைவனின் விருப்பத்திற்கு மாறாக நாங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். 


எங்களால் மற்றவர்களை ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கிறது. 


நாங்கள் எங்களது சிந்தனைகளால் மற்றவர்களை தூரம் பிரித்து வைத்துக் கொண்டிருக்கிறோம்


ஆனால்  வேறு சபை மக்கள் அசுத்தமானவர்கள் அல்ல.


அவர்கள் பரிசுத்தமானவர்கள் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.


அவர்களும் ஒருநாள் பரலோகத்திலே எம்மோடு இருக்கப் போகிறார்கள்.


ஆகவே எல்லா மக்களையும் நாம் எமது சகோதரர்களாக பார்த்து பழக வேண்டியதாக இருக்கிறது.


ஆகவே வேறு சபைகளையும் சபை மக்களையும் எமது சகோதரர்களாக சகோதரிகளாக எமது சபையின் அங்கத்தவர்களாக பார்ப்போம். ஏற்றுக்கொள்ளுவோம்,

நன்றி

Friday, February 12, 2021

இயேசுவானவர் உலகத்தின் கடைசிவரை தமது மக்கள் மத்தியில் வாசம் செய்யும் துாய தேவனை பற்றி கூறுவது என்ன ?

நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன்; 

நான் போகிறது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கும்; 

நான் போகாதிருந்தால், தேற்றரவாளன் உங்களிடத்தில் வரார்; 

நான் போவேனேயாகில் அவரை உங்களிடத்திற்கு அனுப்புவேன்.

அவர் வந்து, பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார். 

அவர்கள் என்னை விசுவாசியாதபடியினாலே பாவத்தைக்குறித்தும், நீங்கள் இனி என்னைக் காணாதபடிக்கு நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினாலே நீதியைக்குறித்தும், இந்த உலகத்தின் அதிபதி நியாயந்தீர்க்கப்பட்டதினாலே நியாயத்தீர்ப்பைக்குறித்தும், கண்டித்து உணர்த்துவார்.

ads

 movie.tamil.bid

Thursday, February 04, 2021

73rd Independence Day of Sri Lanka

இலங்கை நாட்டில் 73வது சுதந்திர தினம்

இலங்கை மக்கள் இன்று தங்கள் 73வது சுதந்திர தினத்தை  கொண்டாடி இருக்கிறார்கள். 

இலங்கை ஜனாதிபதி தனது உரையின் போது தான் இலங்கை சிங்கள-பௌத்த ரென்றும் மற்ற மதங்களுக்கு சம உரிமை உள்ளதாகவும் வாக்களித்திருக்கிறார்.

ஈஸ்டர் ஞாயிறு அன்று நடைபெற்ற தாக்குதல்களையும் வன்மையாக தனது உரையில் கண்டித்திருக்கிறார் இலங்கை ஜனாதிபதி. 

ஜனநாயகப் பாதையில் செல்லும் இலங்கை எதிராக செயற்படும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சக்திகளுக்கு எதிராக செயற்படும் எனவும் அவர் தெளிவாக குறிப்பிட்டு இருக்கிறார். 

 73வது சுதந்திர தின ராணுவ அணிவகுப்பு தற்போது நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.




Sunday, January 31, 2021

லூக்கா Luke 10:33-35, 37

But A Samaritan, As He Traveled, Came Where The Man Was; And When He Saw Him, He Took Pity On Him. He Went To Him And Bandaged His Wounds, Pouring On Oil And Wine. Then He Put The Man On His Own Donkey, Took Him To An Inn And Took Care Of Him.The Next Day He Took Out Two Silver Coins And Gave Them To The Innkeeper. 'Look After Him,' He Said, 'And When I Return, I Will Reimburse You For Any Extra Expense You May Have.' 

Jesus Told Him, "Go And Do Likewise." 

பின்பு சமாரியன் ஒருவன் பிரயாணமாய் வருகையில், அவனைக் கண்டு, மனதுருகி, கிட்ட வந்து, அவனுடைய காயங்களில் எண்ணெயும் திராட்சரசமும் வார்த்து, காயங்களைக் கட்டி, அவனைத் தன் சுயவாகனத்தின்மேல் ஏற்றி, சத்திரத்துக்குக் கொண்டுபோய், அவனைப் பராமரித்தான். மறுநாளிலே தான் புறப்படும்போது இரண்டு பணத்தை எடுத்து, சத்திரத்தான் கையில் கொடுத்து: நீ இவனை விசாரித்துக்கொள், அதிகமாய் ஏதாகிலும் இவனுக்காகச் செலவழித்தால், நான் திரும்பிவரும்போது அதை உனக்குத் தருவேன் என்றான். 

அப்பொழுது இயேசு அவனை நோக்கி: நீயும் போய் அந்தப்படியே செய் என்றார்.

Friday, January 22, 2021

தவறான விதத்தில் இந்த வரி சோதனை நடத்தப்பட்டது கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று - மூன்று நாட்களாக தொடர்கிறது போதகர் போல் தினகரன் வீட்டில் சோதனை

தவறான விதத்தில் இந்த வரி சோதனை நடத்தப்பட்டது கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று.

கிறிஸ்தவர்கள் எப்பொழுதும் அரசாங்கத்திற்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்து வருகிறார்கள்

மக்கள் பணத்தில் கட்டப்பட்ட கட்டிடங்கள் அதற்குரிய வரியை அரசாங்கத்துக்கு செலுத்தி இருக்க வேண்டும். வருமான வரி என்பது கட்டாயம் ஒவ்வொரு கிறிஸ்தவர்களும் செலுத்த வேண்டிய தொகை. இது யாராக இருந்தாலும் அவர்கள் அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டியதாக இருக்கிறது.

‘இயேசு அழைக்கிறார்’ சொந்தமான அடையாறு இல்லம், கோவை காருண்யா பல்கலைக்கழகம் உள்பட உள்பட 28 இடங்களில் ஐடி ரெய்டு நடைபெற்று வருகிறது.

முறையாக வரி செலுத்தாமல் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், வெளிநாடு மூலம் வந்த பணத்தை கணக்கு காட்டவில்லை என்றும் கூறப்படுகிறது.
புகாரின் அடிப்படையில் வருமானத் துறை அதிகாரிகள் நேற்று காலை முதல் தமிழகம் முழுவதும் பால் தினகரனுக்கு சொந்தமான சென்னை உள்பட வீடு உள்பட 28 இடங்களில் அதிரடி சோதனை செய்து வருகின்றனர். 

இயேசு அழைக்கிறார் என்ற குழும்பத்திற்கு வந்த நிதிக்கு முறையாக வரி செலுத்தவில்லை என புகார் வந்ததாகவும் இந்த புகாரின் அடிப்படையில் வருமானத் துறை அதிகாரிகள் நேற்றுமுன் காலை முதல் பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் சோதனை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்நிலையில் திடீரென பால் தினகரனுக்கு சொந்தமான சென்னை பாரிமுனை, அடையாறு, கோவை காருண்யா பல்கலை உள்பட தமிழகத்தில் 28 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றார்.

தமிழகம் உள்பட நாடு முழுவதும் மட்டுமின்றி உலகம் முழுவதும் கிளைகள் உள்ளன. மேலும் பல்வேறு கல்வி நிறுவனங்களும் உள்ளன.
சோதனையிலேயே பலகோடி மதிப்புள்ள ஆவணங்கள் சிக்கி உள்ளதாகவும், அது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழகம் மட்டுமின்றி, உலகம் முழுவதும் இயேசு அழைக்கிறார் பணி செய்து வருகிறார் பால் தினகரன்.
சென்னை அடையாறிலுள்ள `இயேசு அழைக்கிறார்’ மிஷனரியின் தலைமை அலுவலகம், சென்னை பாரிஸிலுள்ள அலுவலகம், பால் தினகரனின் வீடு, அலுவலகங்கள், கோயம்புத்தூரிலுள்ள பால் தினகரனுக்குச் சொந்தமான காருண்யா பல்கலைக்கழகம், காருண்யா கிறிஸ்தவப் பள்ளி, தமிழகம் முழுவதும் `இயேசு அழைக்கிறார்’ மிஷனரிக்குச் சொந்தமான கட்டடங்கள், பிரார்த்தனைக் கூடங்கள் ஆகியவற்றில் இந்தச் சோதனை நடைபெற்றுவருகிறது.

வருமான வரித்துறை அதிகாரிகளின் சோதனை இரண்டு நாள்களுக்கு நீடிக்க வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. `இயேசு அழைக்கிறார்’ மிஷனரி, மறைந்த டி.ஜி.எஸ்.தினகரனால் கடந்த 1962-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது மதபோதகர் பால் தினகரன், அவரது குடும்பத்தினரால் அந்த மிஷனரி நிர்வகிக்கப்பட்டுவருகிறது.

அவர்களின் இணையதளத் தகவலின்படி, கிறிஸ்தவ மத பிரசங்கங்களைத் தமிழகம் முழுவதும் மேற்கொள்வதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதேபோல், `இயேசு அழைக்கிறார்’ தொலைக்காட்சி மூலம் மாதந்தோறும் 10 வெவ்வேறு மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் உலகம் முழுவதும் ஒளிபரப்பப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அரசின் இந்த தவறான முடிவு கண்டிக்கப்பட வேண்டியது

Tuesday, January 19, 2021

கர்த்தருக்குள் நித்திரையடைந்த அமரர் போல் சற்குணம்

கர்த்தருக்குள் நித்திரையடைந்த சுவிஸ் தேசத்தின் தேவ ஊழியர் அமரர் போல் சற்குணம் ஜயா அவர்களுக்கு www.tamil.bid ன் ஆழ்ந்த அனுதாபங்கள்.

Sunday, January 17, 2021

தீமையானது எம்மை அணுகாது இருக்க நாம் ஜெபிக்க வேண்டும். தேவனே எம்மை தீமையிலிருந்து இரட்சிப்பவர்.

கிறிஸ்தவர்களான எமக்கு தீமை ஏற்பட சந்தர்ப்பங்கள் உள்ளது.

தீமைகள் நிகழ்வதை கிறிஸ்தவர்கள் தடுக்க முடியுமா?

இவ்விதமான தீமைகள் ஏற்படுவதற்கு முன்னமேயே நாம் ஜெபிக்க வேண்டியது அவசியமாக இருக்கின்றது. 

தீமையிலிருந்து நம்மை இரட்சிப்பதற்கு இறைவனால் மாத்திரமே முடியுமாக உள்ளது.

தீமையான விடயங்கள் நமக்கு நடந்து விடாதபடிக்கு நாம் ஜெபிக்கும்படியாக வேதாகமம் நமக்கு கற்றுத் தருகின்றது. 

இயேசுவே அவர் கற்பித்த ஜெபத்தில் நமக்கு அக்காரியத்தை குறித்து தெளிவாக அறியத்தந்து ஜெபிக்க கட்டாயப்படுத்தியுள்ளார், 

இயேசு எங்கே இதை கூறியுள்ளார்?

இயேசு கற்பித்த பரமண்டல ஜெபத்தில் இது உள்ளடங்கியுள்ளது.

மத்தேயு 6:13. எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும், 

இப்படி நாம் ஜெபிக்கும் போது என்ன நடக்கின்றது?

தீமையிலிருந்து எங்களை இரட்சியும் என நாம் ஜெபிக்கும் போதே தேவன் எம்மை அதிலிருந்து இரட்சிக்கின்றார்.

தேவன் எம்மை தீமையிலிருந்து இரட்சிப்பவரானதால் நாம் எப்போதும் அவரிடம்  ஜெபிக்கின்றவர்களாகவும் அவருக்கு நன்றியறிதலுள்ளவர்களுமாய் இருப்போம்.

மத்தேயு 6:9-13
9. நீங்கள் ஜெபம்பண்ணவேண்டிய விதமாவது; பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக;
10. உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக.
11. எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்.
12. எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்.
13. எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும், ராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே, ஆமென், என்பதே 

Tuesday, January 12, 2021

இயேசுவை குத்தின கண்கள் காணும்

இயேசு தன் உயிரை தர மானிடனானார். 

அது அவர் சித்தமாய் காட்டினார்.


அவர் நமக்காய் வந்தார் என்றறிந்தோர்

வசனத்தினை கேட்பதற்காய் விரைந்தார்.


தம் பெயர் மறைவதை உணர்ந்தோராய்

பரிசேயர் அவரை பகைத்தார். 


மக்கள் முன் தலைவரானார்

மனம் விரும்ப விருந்தும் அளித்தார் இயேசு


தருணம் வர காட்டியே கொடுத்தார்

இறைமகன் இயேசு கைதானார்.


மக்கள் தலைவரால் சிலுவை எடுத்தார்

மனம் பதைத்தவரும் கைவிட்டு ஓடினர்.


தனியே சுமந்தார் பார சிலுவை

தவித்தே சரீரத்தை ஒப்புக் கொடுத்தார்,


சிலுவையில் அறைந்தார்

இயேசுவின் உயிரை பறித்தார்.


மரித்தவர் கல்லறையினின்று எழுந்தார்

கொன்றவர் திகைத்து நின்றார்.


உயிர்த்த உடலை காட்டி

நிம்மதியாய் வாழச் சொன்னார்


விடைபெற்றார் 2000 வருடத்திற்கு முன்

பரலோகம் சென்று மீண்டும் வருவார்.


அரசனாய் ஆள்வார் உலக மக்களை

காண்பாய் அவர் ராஜ மகிமையை.



(பரலோகிலிருந்து உலகில் பிறந்து வந்து, அற்புதம் செய்து மரித்து பின் உயிரோடழுந்து பரலோகம் சென்ற இயேசு கிறிஸ்து இராஜாதி இராஜனாய் திரும்ப உலகினை ஆளுகை செய்ய வரப்போகின்றார்.)(அரசன் இயேசு வர முன்னே அவரிடம் சேர வேண்டும், இல்லாவிட்டால் நித்திய தண்டனை தரப்படும்.)


Friday, January 08, 2021

ஜாக்கிரதை உள்ளவர்களாக இருப்பதே அவசியம்

எப்போதும் ஜாக்கிரதை உள்ளவர்களாய் கிறிஸ்தவர்கள் காணப்பட வேண்டும்.


எவற்றிற்கு ஜாக்கிரதை உள்ளவர்களாக இருக்க வேண்டும்?


தேவ வசனத்தை பிரசங்கிக்க ஜாக்கிரதை வேண்டும்.

II தீமோத்தேயு 4:2  சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் ஜாக்கிரதையாய்த் திருவசனத்தைப் பிரசங்கம்பண்ணு; 
II தீமோத்தேயு 2:15 நீ வெட்கப்படாத ஊழியக்காரனாயும் சத்திய வசனத்தை நிதானமாய்ப் பகுத்துப் போதிக்கிறவனாயும் உன்னை தேவனுக்கு முன்பாக உத்தமனாக நிறுத்தும்படி ஜாக்கிரதையாயிரு.
II பேதுரு 1:10 ஆகையால், சகோதரரே, உங்கள் அழைப்பையும் தெரிந்துகொள்ளுதலையும் உறுதியாக்கும்படி ஜாக்கிரதையாயிருங்கள்; இவைகளைச் செய்தால் நீங்கள் ஒருக்காலும் இடறிவிழுவதில்லை.


தேவ வார்த்தையை கவனிப்பதில் ஜாக்கிரதை வேண்டும்.

எபிரெயர் 2:1 ஆகையால், நாம் கேட்டவைகளை விட்டுவிலகாதபடிக்கு, அவைகளை மிகுந்த ஜாக்கிரதையாய்க் கவனிக்கவேண்டும்.


வேலையில் ஜாக்கிரதை உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

நீதிமொழிகள் 22:29 தன் வேலையில் ஜாக்கிரதையாயிருக்கிறவனை நீ கண்டால், அவன் நீசருக்கு முன்பாக நில்லாமல், ராஜாக்களுக்கு முன்பாக நிற்பான்.


நித்திய ஜீவ இளைப்பாறுதலுக்கு செல்ல ஜாக்கிரதை வேண்டும்.

எபிரெயர் 4:11 ஆகையால், அந்தத் திருஷ்டாந்தத்தின்படி, ஒருவனாகிலும் கீழ்ப்படியாமையினாலே விழுந்துபோகாதபடிக்கு, நாம் இந்த இளைப்பாறுதலில் பிரவேசிக்க ஜாக்கிரதையாயிருக்கக்கடவோம்.
II பேதுரு 3:14 ஆகையால், பிரியமானவர்களே, இவைகள் வரக் காத்திருக்கிற நீங்கள் கறையற்றவர்களும் பிழையில்லாதவர்களுமாய்ச் சமாதானத்தோடே அவர் சந்நிதியில் காணப்படும்படி ஜாக்கிரதையாயிருங்கள்.


நன்மையை தேடுவதற்கு ஜாக்கிரதையாயிருக்க வேண்டும்.

நீதிமொழிகள் 11:27 நன்மையை ஜாக்கிரதையுடன் தேடுகிறவன் தயையைப் பெறுவான்; தீமையைத் தேடுகிறவனுக்கோ தீமையே வரும்.
தீத்து 2:2 முதிர்வயதுள்ள புருஷர்கள் ஜாக்கிரதையுள்ளவர்களும், நல்லொழுக்கமுள்ளவர்களும், தெளிந்த புத்தியுள்ளவர்களும், விசுவாசத்திலும் அன்பிலும் பொறுமையிலும் ஆரோக்கியமுள்ளவர்களுமாயிருக்கும்படி புத்திசொல்லு.


நற்கிரியை செய்வதற்கு ஜாக்கிரதை வேண்டும்.

தீத்து 3:8 இந்த வார்த்தை உண்மையுள்ளது; தேவனிடத்தில் விசுவாசமானவர்கள் நற்கிரியைகளைச் செய்ய ஜாக்கிரதையாயிருக்கும்படி நீ இவைகளைக்குறித்துத் திட்டமாய்ப் போதிக்கவேண்டுமென்று விரும்புகிறேன்; 
I தீமோத்தேயு 5:10 பிள்ளைகளை வளர்த்து, அந்நியரை உபசரித்து, பரிசுத்தவான்களுடைய கால்களைக் கழுவி, உபத்திரவப்படுகிறவர்களுக்கு உதவிசெய்து, சகலவித நற்கிரியைகளையும் ஜாக்கிரதையாய் நடப்பித்து, இவ்விதமாய் நற்கிரியைகளைக்குறித்து நற்சாட்சி பெற்றவளுமாயிருந்தால், அப்படிப்பட்ட விதவையையே விதவைகள் கூட்டத்தில் சேர்த்துக்கொள்ளவேண்டும்.


ஜெபிக்க ஜாக்கிரதை வேண்டும்.

I பேதுரு 4:7 எல்லாவற்றிற்கும் முடிவு சமீபமாயிற்று; ஆகையால் தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருந்து, ஜெபம்பண்ணுவதற்கு ஜாக்கிரதையுள்ளவர்களாயிருங்கள்.


(நியாயப்பிரமாணத்தை) தேவ கட்டளையை செய்ய ஜாக்கிரதையாயிருக்க வேண்டும்.

II இராஜாக்கள் 21:8 நான் அவர்களுக்குக் கற்பித்த எல்லாவற்றின்படியேயும், என் தாசனாகிய மோசே அவர்களுக்குக் கற்பித்த எல்லா நியாயப்பிரமாணத்தின்படியேயும் செய்ய ஜாக்கிரதையாய் இருந்தார்களேயானால், நான் இனி இஸ்ரவேலின் காலை அவர்கள் பிதாக்களுக்குக் கொடுத்த தேசத்தைவிட்டு அலையப்பண்ணுவதில்லை என்று சொல்லியிருந்தார்.
உபாகமம் 4:10 உன் கண்கள் கண்ட காரியங்களை நீ மறவாதபடிக்கும், உன் ஜீவனுள்ள நாளெல்லாம் அவைகள் உன் இருதயத்தை விட்டு நீங்காதபடிக்கும் நீ எச்சரிக்கையாயிருந்து, உன் ஆத்துமாவைச் ஜாக்கிரதையாய்க் காத்துக்கொள்; அவைகளை உன் பிள்ளைகளுக்கும் உன் பிள்ளைகளின் பிள்ளைகளுக்கும் அறிவிக்கக்கடவாய்.
உபாகமம் 11:22 நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரிடத்தில் அன்புகூர்ந்து, அவர் வழிகளிலெல்லாம் நடந்து, அவரைப் பற்றிக்கொண்டிருக்கும்படி, நான் உங்களுக்குச் செய்யக் கற்பிக்கிற இந்தக் கற்பனைகளையெல்லாம் ஜாக்கிரதையாய்க் கைக்கொள்வீர்களானால்,


தேவ ஆலயத்திற்குரிய தேவைகளை செலுத்த ஜாக்கிரதை அவசியம். (அர்தசஷ்டா ராஜாவின் கட்டளை)

எஸ்றா 7:23 பரலோகத்தின் தேவனுடைய கற்பனையின்படியே, எது தேவையாயிருக்குமோ அதுவெல்லாம் பரலோகத்தின் தேவனுடைய ஆலயத்திற்கு ஜாக்கிரதையாய்ச் செலுத்தப்படவும் வேண்டும்; 


சபை மக்களுக்கு பாரமாயிராதபடிக்கு ஜாக்கிரதையாயிருத்தல்.

II கொரிந்தியர் 11:9 நான் உங்களோடிருந்து குறைவுபட்டபோதும், ஒருவரையும் நான் வருத்தப்படுத்தவில்லை; மக்கெதோனியாவிலிருந்து வந்த சகோதரர் என் குறைவை நிறைவாக்கினார்கள்; எவ்விதத்திலேயும் உங்களுக்குப் பாரமாயிராதபடிக்கு ஜாக்கிரதையாயிருந்தேன், இனிமேலும் ஜாக்கிரதையாயிருப்பேன்.


ஒற்றுமைக்காக ஜாக்கிரதையாயிருக்க வேண்டும்.

எபேசியர் 4 1/3. ஆதலால், கர்த்தர் நிமித்தம் கட்டுண்டவனாகிய நான் உங்களுக்குச் சொல்லுகிற புத்தியென்னவெனில், நீங்கள் அழைக்கப்பட்ட அழைப்புக்குப் பாத்திரவான்களாய் நடந்து, மிகுந்த மனத்தாழ்மையும் சாந்தமும் நீடிய பொறுமையும் உடையவர்களாய், அன்பினால் ஒருவரையொருவர் தாங்கி, சமாதானக்கட்டினால் ஆவியின் ஒருமையைக் காத்துக்கொள்வதற்கு ஜாக்கிரதையாயிருங்கள்.
I தீமோத்தேயு 3:2 ஆகையால் கண்காணியானவன் குற்றஞ்சாட்டப்படாதவனும், ஒரே மனைவியை உடைய புருஷனும், ஜாக்கிரதையுள்ளவனும், தெளிந்த புத்தியுள்ளவனும், யோக்கியதையுள்ளவனும், அந்நியரை உபசரிக்கிறவனும், போதகசமர்த்தனுமாய் இருக்கவேண்டும்.


முடிவு பரியந்தம் ஜாக்கிரதை.

எபிரெயர் 6:12 உங்களுக்கு நம்பிக்கையின் பூரண நிச்சயமுண்டாகும்படி நீங்கள் யாவரும் முடிவுபரியந்தம் அப்படியே ஜாக்கிரதையைக் காண்பிக்கவேண்டுமென்று ஆசையாயிருக்கிறோம்.
வெளி 3:19 நான் நேசிக்கிறவர்களெவர்களோ அவர்களைக் கடிந்துகொண்டு சிட்சிக்கிறேன்; ஆகையால் நீ ஜாக்கிரதையாயிருந்து, மனந்திரும்பு.

Sunday, January 03, 2021

நீ இனி அலைந்து திரிவதில்லை

கர்த்தருடைய பார்வைக்கு நாம் உண்மையுள்ளவர்களாயிருக்க வேண்டுமானால் கர்த்தருடைய பாதையில் நாம் செல்ல வேண்டும்,

கர்த்தருடைய பாதையில் செல்லும் யாவரும் அலைந்து திரிய வேண்டுவதில்லை.

ஓய்வுநாளாகிய கர்த்தருடைய நாளில் அவரின் சித்தப்படி வாழ எம்மை ஒப்புக் கொடுக்க வேண்டும்,

இஸ்ரவேலே, நீ திரும்புகிறதற்கு மனதாயிருந்தால் என்னிடத்தில் திரும்பு என்று கர்த்தர் சொல்லுகிறார்; நீ உன் அருவருப்புகளை என் பார்வையினின்று அகற்றிவிட்டால், நீ இனி அலைந்து திரிவதில்லை. நீ உண்மையோடும், நியாயத்தோடும், நீதியோடும், கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு ஆணையிடுவாய்; புறஜாதிகளும் அவருக்குள் ஆசீர்வதிக்கப்பட்டு, அவருக்குள் மேன்மைபாராட்டுவார்கள்.

எரேமியா 4:1-2



Thursday, December 31, 2020

கர்த்தர் தாமே புதிய வருடம் 2021இனை உங்களுக்கு ஆசீர்வாதமாக்குவாராக,

எமது வாசகர்களுக்கு,

2021 ஆசீர்வாதமான புதிய ஆண்டு நல்வாழ்த்துக்கள்,, 

கர்த்தர் தாமே இப்புதிய 2021ம் வருடத்தில் உங்களையும், உங்கள் குடும்பத்தையும் பாதுகாக்கவும், ஆசீர்வதிக்கவும் செழிக்கவும் செய்வாராக,

கர்த்தர் உங்கள் இருதயங்களை தேவனைப்பற்றும் அன்புக்கும் கிறிஸ்துவின் பொறுமைக்கும் நேராய் நடத்துவாராக. 2 தெசலோனிக்கேயர் 3


http://www.tammil.co/ ன் புதுவருட வாழ்த்துக்கள்
இம்மானுவேல் இன்பநாதன் லிப்னி எஸ்ரோன்
அவுஸ்திரேலிய புது வருட கொண்டாட்டம் காணொளி



வருட முடிவிலும் தேவ ஆசி



2020க்கு கர்த்தருக்கு நன்றி என்று சொல்லுகிறோம்

இந்த வருட முடிவில் நாங்கள் என்ன செய்திருக்கிறோம் என்று எண்ணிப் பார்க்க முடிகிறதா?.

இந்த வருடத்தின் இறுதி நாட்கள் கர்த்தர் எங்களுக்குச் செய்த நன்மைகளை நினைத்து பார்க்கவேண்டும் 

அடுத்த வருடத்திற்குள் நாங்கள் நுழையப் போகிறோம். புதிய வருடத்தை நன்மையால்  நிரப்புகின்றவர். கர்த்தர். 

புதிய வருடத்தை ஆசீர்வதிக்கின்றவர் கர்த்தர். நாம் வாழும் ஆயிரம் நாட்கள் கர்த்தருக்கு ஒரு நாளைப் போல இருக்கிறது. 

எவ்வளவு காலம் வாழ்கின்றோம் என்பதல்ல. வாழ்கின்ற நாட்களெல்லாம் கர்த்தருக்கு பிரியமாக வாழ வேண்டும் என்பதையே அவர் விரும்புகிறார்

நாம் வாழவேண்டிய காலத்தை கர்த்தரே நிர்ணயம் செய்கிறார். மனிதன் பூரண ஆயுள் உள்ளவனாக இருக்க வேண்டும் என்பதே கர்த்தரின்  சித்தமாக  இருக்கிறது. நன்மையான எந்த ஈவும் சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து வருகிறது. அவர் எம்மை கைவிடமாட்டார். கர்த்தர் தம்முடைய பிள்ளைகளுக்கு நன்மையானவற்றை அனுமதிக்கிறார். அவர் மனிதனுக்கு தகாதவற்றை அனுமதிப்பதில்லை.

அவர் கரத்தால் சிருஷ்டிக்கப்பட்டதனால் அவர் எம்மை புது சிருஷ்டியாக்குவார். அவருடைய கிருபை எம்மை நடத்துகிறது.  அவருடைய  கரம் எம்மை  உயிர்ப்பிக்கிறது.

நாம் கர்த்தர் செய்தவைகளுக்காக நன்றி செலுத்துவதோடு வருங் காலங்களை அவரிடம் ஒப்படைப்போம். கர்த்தரே நம்மை நடத்தட்டும்.  அவர் எம்மை கவனிப்பார். 




Wednesday, December 30, 2020

கொரனாவும் தடுப்பூசியும் : மரணத்தை காத்திருந்து பெற்றுக்கொள்ளும் காலமா?

உலகம் இன்று மிகவும் போராடி வருகின்றது. 

ஏன்? 
எதற்காக? 

உலகின் பயங்கர கொலையாளியாக மாறியிருக்கும் கொரனா என்னும் கொடிய அரக்கனை கண்டு பயந்து இருக்கிறது.

உலகில் கொலையாளியாக மக்களைத் தினம் தினம்  வாட்டி வதைக்கிறது இந்த எதிரி.
ஒளிந்திருந்து காரியத்தை கச்சிதமாக முடிக்கிறது.


எதிர்பார்த்தாலும் எதிர்பார்க்காதவரும்  எதிர்காலத்தை நினைத்து வருந்துகிற

அவல நிலைக்குள் நம்மை தள்ளி இருக்கிறது.

அரக்கனை அழிக்கும் வண்ணமாக  உலகில் விஞ்ஞானிகள் போராடி வருகின்றார்கள். 

உலக செய்திகள் எல்லாம் இன்று தடுப்பூசிகளால் கொரனாவுக்கு முடிவு கட்டப்பட்டு வருகின்றது என தெரிவித்து வருகின்றன. 


நமது எதிர்காலம் என்னாவது?


விடிவு காலம் பிறக்கும் என நம்பலாமா?

பல நாடுகளில் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டு வருகிறது.


பல நாடுகள் அவற்றை இறக்குமதி செய்வதற்கு தயாராகி வருகின்றன.

அதற்குள் வேறு பல புதிய நோய்களும் உருவாகிக் கொண்டிருக்கிறது.


இது கொள்ளை நோய்களின் காலம்.

இதுவே முடிவு காலம்.


வாழ்க்கை ஒரு மாயை. 

வாழ்வது துயர் நிறைந்த வாழ்வை. 


வரம் தருவது இறைவனின் கிருபை. 

அவர் அண்டை சேர்வதே பெருமை.


வந்துவிடும் தடுப்பூசி

ஒழிந்துவிடும் கொரனா.





Rate www.Tamil.bid
Advertisements Box is loading Ads...

Contact Form

Name

Email *

Message *


Sri Lanka Tamil Typesetting, English to Tamil Translation, Sinhala to Tamil Translations, Type setting, Book Printing,, Page maker, Corel draw, Mobile: +94 775076775 & ezcash, http://tamiltranslation.tk/, https://sites.google.com/view/typesettingintamil94775076775, https://uyir.business.site/, https://tamiltypesetting.godaddysites.com, සිංහල, ඉංග්රීසි සිට දෙමලට පරිවර්තනය .. சிங்களம், ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பு சேவை .. Tamil Translations, from Sinhala & English, with Typesetting, from Colombo. மொபைல் +94775076775, ( hezron libn, lipni22, libni hezron, lipni, uyir, uyiron ) . . http://tamil.cf . Christian . . . http://tamil.gq . Tamil . . . http://lipni-hezron.tk . Sri Lanka . . . http://libni-hezron.tk . News . . . http://libnihezron.tk . Net . . . http://libni.tk . google . . . http://lipni.tk . USA . . . http://uyir-tamil.tk . UK . . . http://lipni-tamil.tk . Tamil . . . http://tamiltranslation.tk . search . . . http://tamiltranslation.ml . Tamilchristian . . . http://tamiltranslation.ga . lanka . . . http://tamiltranslation.cf . Sri . . . http://tamiltranslation.gq . blog . . . http://clj2c.tk . new . . . http://lankatour.tk . like . . . http://tammil.tk . page . . . http://tammil.ml . free . . . http://tammil.ga . link . . . http://tammil.cf . corona . . . http://tammil.gq . usd . . . http://pasikudahtours.tk . paypal . . . http://christiantamil.tk . money . . . http://uyirchristian.tk . translate . . . http://christianlk.tk . Work . . . http://uyir.tk . end . . . http://uyirchristiannet.tk . time . . . . . http://contact.tammil.co . ministry . . . http://facebook.tammil.co . facebook . . . http://Youtube.tammil.co . yourtube . . . http://main.tammil.co . tammil . . . http://paypal.tammil.co . paypal . . . http://Publication.tammil.co . book . . . http://twitter.tammil.co . Twitter . . . http://top-up.tammil.co . reload . . . Christian . . Tamil . . Sri Lanka . . News . . Net . . google . . USA . . UK . . Tamil . . search . . Tamilchristian . . lanka . . Sri . . blog . . new . . like . . page . . free . . link . . corona . . usd . . paypal . . money . . translate . . Work . . end . . time . . . . ministry . . facebook . . yourtube . . tammil . . paypal . . book . . Twitter . . reload