உலகம் மாறிக் கொண்டிருக்கிறது. மனிதர்கள் மாறிக் கொண்டிருக்கிறார்கள். மனிதர்களுடைய எண்ணங்கள், மனிதருடைய திட்டங்கள் மாறிக்கொண்டிருக்கிறது. அவனுடைய எண்ணங்கள் உயர்வானதாக பெருமை கொண்டதாக இருக்கிறது..
ஆனாலும் மனிதனை படைத்த தேவனுடைய எண்ணங்கள் எப்பொழுதும் மனிதனைப் பற்றியதாக உள்ளது. நாங்கள் எப்பொழுதும் தேவனுடைய கிருபையினால் வாழ்வதற்கு அவரே காரணமாக இருக்கின்றார்.
கடவுள் தனது மகனை இந்த உலகத்துக்கு அனுப்பும் அவருடைய எண்ணம் எப்போதும் மாறாததாகத்தான் இருந்திருக்கிறது. அவர் தனது திட்டத்தை ஒருபோதும் மாற்றிவிடவில்லை. அவருடைய விருப்பத்தில் அவர் எப்பொழுதும் இருக்கிறார்.. ஆகவே தான் அவர் தன்னுடைய மகனை சிலுவையில் அறைவதற்கு முற்றுமாக கொடுத்திருக்கிறார்.
அவருடைய திட்டத்தை அவர் மாற்றப்போவதில்லை. இயேசுகிறிஸ்து நேற்றும், இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். எபிரெயர் 13:8
No comments:
Post a Comment