இலங்கையில் 2019ம் ஆண்டு நடத்தப்பட்ட ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்துடன் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கு தொடர்பு இருப்பதாக ஒரு தகவல் இலங்கை நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது.
ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்துடன் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கு தொடர்புள்ளமை குறித்து தகவல் உள்ளதாக பிரதான எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
அத்துடன், ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பிற்கும், இலங்கையர் ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாக தம்மிடம் தகவல் உள்ளதாகவும், அது தொடர்பில் அரசாங்கம் அறிந்துள்ளதா எனவும் ஹரின் பெர்ணான்டோ சபையில், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகரவை நோக்கி கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் வழங்கிய சரத் வீரசேகர, ஆம் என பதில் கூறினார்.
எனினும், ரகசியங்களை தற்போதைக்கு கூற முடியாது எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
சில சந்தர்ப்பங்களில் நாடாளுமன்றத்திலுள்ள சிலரும் இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புப்பட்டுள்ளமை உறுதிப்படுத்த வாய்ப்பு உள்ளதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை, ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் 257 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக சரத் வீரசேகர தெரிவிக்கிறார்.
அவர்களில் 86 பேர் தடுப்பு காவல் உத்தரவின் பேரில் தடுத்து வைத்து விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
மேலும், ஈஸ்டர் தினத்தன்று 8 இடங்களில் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும், அது தொடர்பிலான தகவல்களுடன் வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை துரிதப்படுத்துகின்றமை குறித்து தான் சட்ட மாஅதிபரை தனிப்பட்ட ரீதியில் சந்தித்து கலந்துரையாடல்களை நடத்த எதிர்பார்த்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கூறுகிறார்.
இலங்கையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் தேதி நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் 277 பேர் கொல்லப்பட்டதுடன், 400ற்கும் அதிகமானோர் காயமடைந்திருந்தனர்.
இவ்வாறு உயிரிழந்தவர்களில் 40 வெளிநாட்டவர்களும், 45 சிறார்களும் அடங்குவதாக ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசேட செயற்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேசிய தௌஹித் ஜமாத் அமைப்பினால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று அமைக்கப்பட்டு, விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்ற நிலையிலேயே. நாடாளுமன்றத்தில் தற்போது புதிய தகவல்கள் விவாதிக்கப்பட்டுள்ளன.
x
www.uyir.tk எம் உயிர்மீட்க தம் உயிர்தந்து உயிர்த்தெழுந்தவருக்காக
Fear God and keep his commandments,for this is the duty of all mankind.For God will bring every deed into judgment, including every hidden thing, whether it is good or evil.
தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே.ஒவ்வொரு கிரியையையும், அந்தரங்கமான ஒவ்வொரு காரியத்தையும் நன்மையானாலும் தீமையானாலும், தேவன் நியாயத்திலே கொண்டுவருவார்.
දෙවියන්ට ගරුබිය දක්වා, එතුමන්ගේ ආඥා පිළිපදින්න. මිනිසා මවන ලද්දේ ඒ සඳහා ය. අපේ සියලු රහස් හොඳ හෝ නරක හෝ වේ වා දෙවියන් වහන්සේගේ විනිශ්චයයට භාජනය වනු ඇත. Ecclesiastes பிரசங்கி 12:13-14 ධර්මදේශකයා
தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே.ஒவ்வொரு கிரியையையும், அந்தரங்கமான ஒவ்வொரு காரியத்தையும் நன்மையானாலும் தீமையானாலும், தேவன் நியாயத்திலே கொண்டுவருவார்.
දෙවියන්ට ගරුබිය දක්වා, එතුමන්ගේ ආඥා පිළිපදින්න. මිනිසා මවන ලද්දේ ඒ සඳහා ය. අපේ සියලු රහස් හොඳ හෝ නරක හෝ වේ වා දෙවියන් වහන්සේගේ විනිශ්චයයට භාජනය වනු ඇත. Ecclesiastes பிரசங்கி 12:13-14 ධර්මදේශකයා
Thursday, December 10, 2020
இலங்கையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் தேதி நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் 277 பேர் கொல்லப்பட்டதுடன், 400ற்கும் அதிகமானோர் காயமடைந்திருந்தனர்.
Monday, December 07, 2020
கிறிஸ்துவின் வருகையை அறிவிக்கும் எதிர்கால நோக்கை கொண்ட புத்தகம் பரிசுத்த வேதாகமம்
அன்றியும் மனுஷகுமாரன் தமது மகிமைபொருந்தினவராய்ச் சகல பரிசுத்த தூதரோடுங்கூட வரும்போது, தமது மகிமையுள்ள சிங்காசனத்தின் மேல் வீற்றிருப்பார்.
உலகம் எதிர்கொள்ளப்போகும் மிகப்பெரிய சவாலாக கிறிஸ்துவின் இராஜரீகமான வருகை அமையவுள்ளது. இயேசுவை எதிர்த்தோர் அவரை காணப்போகின்றார்கள். இயேசுகிறிஸ்துவை ஏசியவர்கள், எதிர்த்தவர்கள், அவமதித்தவர்கள் அவரைக் காணப்போகின்றார்கள்.
அப்போது அவர்களின் நிலை என்ன? மத்தேயு 25:31ல் கூறப்படும் இக்காரியம் எதைப்பற்றி கூறுகின்றது. உலகிற்கு இறைவன் மனித சாயலாக மனிதன் காணும் வண்ணமாகவே வந்ததால் அவரது வெளிப்பாடு இங்கு மனுஷகுமாரன் எனப்படுகின்றது.
இயேசுக்கிறிஸ்துவே இவ்வுலகின் படைப்பாளராவார். அவர் பாவிகளின் கைகளினால் மரணத்தை தழுவினார். ஆனாலும் அவர் இறைவன் என்பதினால் மரணத்திலிருந்து ஜெயம்கொண்டவராக மனுஷகுமாரன் உயிரோடு எழும்பினார்.
மரணம் மனிதர்களை மாத்திரமே மரணிக்க வைக்கலாம். இறைவனால் மனிதனுக்கு தண்டனையாக கொடுக்கப்பட்ட மரணத்தை இறைவன் மனிதன் மேல் வைத்த அன்பின் நிமித்தமாக மனிதனாக வந்து மரணத்தை எதிர்கொண்டு வெற்றி சிறந்து காட்டினார்.
இது இயேசுவை கொலைசெய்த மனிதர்களுக்கு கிட்டிய வெற்றியல்ல. மனிதர்களை மரணத்திலிருந்து விடுவிக்கத்தக்கவர் தான் என்பதை காட்டிக்கொடுத்த கிறிஸ்துவின் வெற்றியே ஆகும்.
இவ்வாறு மரணத்தை வெற்றிகொண்ட இறைவனை விசுவாசிப்பதன் மூலமாக நாமும் மரணத்தை வெற்றிக்கொள்ள முடியும். புதிய நித்திய ஜீவனை நாம் பெற்றுக்கொள்ள முடியும். அவ்வாறான சந்தர்ப்பமே இங்கு தரப்படுவதற்காகவே உள்ளது.
கிறிஸ்து உலகிற்கு வரப்போகும் நாள் மிகவும் தொலைவிலில்லை. அது மிகவும் அருகிலிருக்கின்றது. அந்நாளை யாரும் அறியார். சிலவேளைகளில் இதை நீங்கள் வாசிக்கும் முன்னதாகவோ கூட இடம்பெற்றிருக்கலாம்.
அவரது வருகை பரிசுத்த தூதரோடுங்கூட இருக்கும் என வேதாகமம் கூறுகின்றது. அவர் சீக்கிரம் வரப்போகின்றார் என ஏற்கனவே வேதாகமம் எச்சரிக்கின்றது. இவ்வித தீர்க்கதரிசனங்களைக் கொண்ட புத்தகமாக இன்று இந்த உலகில் வேதாகமம் மட்டுமே உள்ளது.
கிறிஸ்துவின் வருகையை அறிவிக்கும் எதிர்கால நோக்கை கொண்ட புத்தகம் பரிசுத்த வேதாகமம் மட்டுமே. அவருடைய மகிமையுள்ள சிங்காசனத்தின் மேல் சிலுவையில் அறையப்பட்ட கிறஸ்து இப்போது இராஜாவாக வீற்றிருக்கின்றார்.
இப்போது அவரை பற்றி நோக்குங்கள். அவரை சிலுவையில் அறைந்தவர்கள் அவர் முன் கைகட்டி நிற்க வேண்டி ஏற்படும். கிறிஸ்துவின் உயிர்ப்பை விசுவாசியாதவர்கள் அவர் முன் மௌனிகளாக இருக்க வேண்டி ஏற்படும்.
இயேசுவை அறிந்தும் அவரது செய்தியை தள்ளிய நீங்களும் அவருக்கு முன் என்ன செய்யப் போகின்றீர்கள்? அவர் இனி இராஜாவாக வாரப்போகின்றார்.
எப்போது அவர் மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்தாரோ அப்போதிருந்தே அவர் தம்முடைய சிங்காசனத்திலிருந்து இந்த உலகை நோக்கிக்கொண்டிருக்கின்றார்.
இன்றைய நாட்களில் நாம் அவரது செயற்பாடுகளை அறிந்து கொள்கின்றோம்.
எவ்வாறு? கிறிஸ்து இன்றும் சபைகளில் தம்முடைய மக்களோடு பேசிக்கொண்டிருக்கின்றார்.
ஏன்? இன்னும் மக்கள் இயேசுவை அறிந்து கொள்ளவில்லை. அறிந்து கொண்டாலும் அவரை ஏற்க விரும்பவில்லை.
வெறுமனே அற்புதங்களை மாத்திரம் நிகழ்த்தி தமது மாபெரும் மேன்மையை நீரூபிக்க வேண்டிய தேவை கொண்டவரல்ல சிங்காசனத்திலிருக்கும் இறைவன். அவரால் இந்த உலகை எவ்வாறு உருவாக்கினாரோ அவ்வாறு அழிக்கவும் முடியும்.
ஆயினும் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாத உங்களுக்காக இன்னும் காத்துக் கொண்டிருக்கின்றார். அவர் சீக்கிரமாய் வரப்போகின்றார்.
அவரது வருகை இப்போதும் நிகழலாம். செய்யவேண்டியது ஒன்றே அவரை விசுவாசிப்பது மாத்திரமே.
உங்களை ஆளுகிறவர்களை விட வல்லமையுள்ளவர் வரும்போது எவ்வாறு அவர்களுக்கு ஆதரவளிப்பீர்களோ அவ்வாறு இந்த இறைமகனுக்கு ஆதரவளியுங்கள்.
அப்போது உங்கள் மரணத்தின் பின்னதான வாழ்க்கையில் நீங்கள் கிறிஸ்துவோடு பரலோகில் உங்கள் நித்திய வாழ்க்கையை களிக்க முடியும்.
Sunday, December 06, 2020
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வல்லமையையும் வருகையையும் உங்களுக்கு அறிவித்தோம்
இயேசு கிறிஸ்துவின் வருகை சீக்கிரமாக இருக்கிறது. அதற்கு ஆயத்தம் உள்ளவர்களாக நாம் கிறிஸ்துவின் பாதையிலே செல்ல வேண்டியவர்களாக இருக்கிறோம். வீணான அசுத்தமான காரியங்களை எங்கள் வாழ்வை விட்டு அகற்றிக் கொள்ள வேண்டியவர்களாக நாங்கள் இருக்கிறோம்.
நாம் கிறிஸ்துவைப் பின்பற்றி கிறிஸ்துவை போல வாழ வேண்டும் அவர் நமக்கு அளித்த கட்டளைகளை பின்பற்றுவதன் மூலம் நாம் அவரை மதிக்கிறோம். இயேசு உலகில் வாழ்ந்தார். அவருடைய வாழ்க்கை சரித்திரத்தில் இடம் பெற்றுள்ளது. அவர் உயிர்த்தெழுந்தார். அவர் மீண்டும் வருவார்.
உலகில் நடைபெறாத ஒன்று வேதாகமத்தில் எழுதப்பட்டிருக்கவில்லை. நிச்சயமாக நடந்தவைகளை கண்ணால் கண்டவர்கள் தெளிவாக வேதாகமத்தில் எழுதியிருக்கிறார்கள் சாட்சி கூறி இருக்கிறார்கள். நிச்சயமாக அவர்கள் பார்த்தவர்களை இயேசுவின் மூலமாக அவைகளை கேட்டு எமக்கு அறியத் தந்திருக்கிறார்கள்
நாங்கள் தந்திரமான கட்டுக்கதைகளைப் பின்பற்றினவர்களாக அல்ல, அவருடைய மகத்துவத்தைக் கண்ணாரக் கண்டவர்களாகவே நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வல்லமையையும் வருகையையும் உங்களுக்கு அறிவித்தோம்.
II பேதுரு 1:16
Saturday, December 05, 2020
இயேசுவை பின்பற்ற வேண்டும்
இயேசுவை காட்டிட வேண்டும் அவர் அன்பினை உணர்த்திட வேண்டும்
தினம் இயேசுவை துதித்திட வேண்டும் அவர் பாதை சென்றிட வேண்டும்
அவர் தியாகத்தை காட்ட வேண்டும் எங்கும் அவர் புகழ் பாட வேண்டும்
இயேசுவைப் போல் மாறிட வேண்டும் அவர் வார்த்தைகளை கற்றிட வேண்டும்
Friday, December 04, 2020
கடவுள் தனது மகனை இந்த உலகத்துக்கு அனுப்பும் அவருடைய எண்ணம் எப்போதும் மாறாதது
உலகம் மாறிக் கொண்டிருக்கிறது. மனிதர்கள் மாறிக் கொண்டிருக்கிறார்கள். மனிதர்களுடைய எண்ணங்கள், மனிதருடைய திட்டங்கள் மாறிக்கொண்டிருக்கிறது. அவனுடைய எண்ணங்கள் உயர்வானதாக பெருமை கொண்டதாக இருக்கிறது..
ஆனாலும் மனிதனை படைத்த தேவனுடைய எண்ணங்கள் எப்பொழுதும் மனிதனைப் பற்றியதாக உள்ளது. நாங்கள் எப்பொழுதும் தேவனுடைய கிருபையினால் வாழ்வதற்கு அவரே காரணமாக இருக்கின்றார்.
கடவுள் தனது மகனை இந்த உலகத்துக்கு அனுப்பும் அவருடைய எண்ணம் எப்போதும் மாறாததாகத்தான் இருந்திருக்கிறது. அவர் தனது திட்டத்தை ஒருபோதும் மாற்றிவிடவில்லை. அவருடைய விருப்பத்தில் அவர் எப்பொழுதும் இருக்கிறார்.. ஆகவே தான் அவர் தன்னுடைய மகனை சிலுவையில் அறைவதற்கு முற்றுமாக கொடுத்திருக்கிறார்.
அவருடைய திட்டத்தை அவர் மாற்றப்போவதில்லை. இயேசுகிறிஸ்து நேற்றும், இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். எபிரெயர் 13:8
Thursday, December 03, 2020
What we need to do for those affected by the hurricane burevi சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நாம் செய்ய வேண்டியது என்ன
The hurricane causes different impacts in different countries.
බුරේවි සුළි කුණාටුවෙන් පීඩාවට පත් වූවන් සඳහා අප කළ යුත්තේ කුමක්ද?
සුළි කුණාටුව විවිධ රටවල විවිධ බලපෑම් ඇති කරයි.
සුළි කුණාටුවේ බලපෑම දැන් ශ්රී ලංකාවේ සහ ඉන්දියාවේ දැනේ. එය ශ්රී ලංකාවේ උතුරේ ද සහ දකුණු ඉන්දියාවේ ද විවිධ බලපෑම් ඇති කර තිබේ.
The impact of the cyclone is felt in Sri Lanka and India now. It has had various impacts on Tamils in the north of Sri Lanka and Tamils in the south of India.
சூறாவளி பல்வேறு பாதிப்புகளை பல்வேறு நாடுகளில் ஏற்படுத்துகிறது. இலங்கை மற்றும் இந்தியாவில் சூறாவளியின் தாக்கம் உணரப்படுகிறது.
இது இலங்கையின் வடபகுதி தமிழர்கள் மற்றும் இந்தியாவின் தென் பகுதி தமிழர்கள் மக்களின் வாழ்வில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது
බුරේවි සුළි කුණාටුවෙන් පීඩාවට පත් වූවන් සඳහා අප කළ යුත්තේ කුමක්ද?
සුළි කුණාටුව විවිධ රටවල විවිධ බලපෑම් ඇති කරයි.
සුළි කුණාටුවේ බලපෑම දැන් ශ්රී ලංකාවේ සහ ඉන්දියාවේ දැනේ. එය ශ්රී ලංකාවේ උතුරේ ද සහ දකුණු ඉන්දියාවේ ද විවිධ බලපෑම් ඇති කර තිබේ.
Tuesday, December 01, 2020
தேவனுடைய பலத்த கரமே இஸ்ரவேலருக்காக யுத்தம் செய்யும்.
இஸ்ரவேல் மக்களுடைய அக்கிரமங்கள், பாவ சிந்தனைகள் பெருகிய போது தேவன் அவர்களை ஏனைய ஜாதிகளிடத்தில் சிதறடித்தார்.
அவர்கள் ஏனைய ஜாதியினரிடம் சிறைப்பட்டுப் போவதற்கு அவர்களது பாவங்களே காரணமாக அமைந்தன.
சிறைப்பட்டுப் போன யூதர்கள் அந்த ஜாதிகளால் முழுவதுமாக அழிக்கப்பட்டனர்.
அவர்களது சொத்துக்கள் ஏனைய ஜாதியினரால் பறிக்கப்பட்டன.
“ஜாதிகளுக்குள்ளே உங்களைச் சிதற அடித்து, உங்கள் பின்னாகப் பட்டயத்தை உருவுவேன்” (லேவியராகமம் 26:19)
யூதர்கள் சிதற அடிக்கப்பட்டது மட்டுமல்ல. அவர்கள் பின்னாக ஜாதிகள் பட்டயத்தை வைத்திருந்தார்கள்.
ஒவ்வொரு யூதனும் மரித்துப் போவதற்கு தேவனுடைய இந்த எச்சரிப்புக்களை விட்டு அவர்கள் விலகியதே காரணமாக இருக்கின்றது.
அவன் எதனை செய்யக்கூடாததாயிருந்தது. “நீங்கள் எனக்குச் செவிகொடாமலும், இந்தக் கற்பனைகள் எல்லாவற்றின்படி செய்யாமலும், என் கட்டளைகளை வெறுத்து, உங்கள் ஆத்துமா என் நியாயங்களை அரோசித்து, என் கற்பனைகள் எல்லாவற்றின்படியும் செய்யாதபடிக்கு, என் உடன்படிக்கையை நீங்கள் மீறிப்போடுவீர்களாகில்:” (லேவியராகமம் 26:14-15)
1. இஸ்ரவேலர் தங்கள் தேவனாகிய கர்த்தருக்கு செவிகொடுக்காமற் போனார்கள்.
2. தேவனால் கொடுக்கப்பட்ட கட்டளைகளை அவர்கள் முழுமையாக செய்ய விரும்பவில்லை.
3. அவர்கள் தேவனுடைய கட்டளைகளை வெறுத்தார்கள்.
4. அவர்கள் நியாயங்களைஅரோசித்தார்கள்.
5. கற்பனைகள் எல்லாவற்றையும் செய்யவில்லை 6. முடிவாக அவரது உடன்படிக்கையை மீறிப்போட்டார்கள்.
இவ்விதமாக செய்யும் போது தேவனுடைய கோபத்திற்கு ஆளாக நேரிடுகின்றது.
இவ்விதமாக தேவனுக்கு விரோதமான காரியங்களின் காரணமாக இஸ்ரவேலருக்கு தேவன் கொடுத்த தேசத்திலிருந்து வேறு தேசங்களுக்குச் செல்ல வேண்டியதாக இருந்தது.
அவர்கள் தங்கள் ஜீவனுள்ள தேவனிடமிருந்து செல்ல வேண்டியதாக இருந்தது.
“நான் உங்களுக்கு விரோதமாக என் முகத்தைத் திருப்புவேன். உங்கள் சத்துருக்களுக்கு முன்பாக முறிய அடிக்கப்படுவீர்கள். உங்கள் பகைஞர் உங்களை ஆளுவார்கள். துரத்துவார் இல்லாதிருந்தும் ஓடுவீர்கள்” (லேவியராகமம் 26:17)
இவ்விதமான சிறிய தண்டனைகளுக்கும் அவர்கள் செவிகொடுக்காவிட்டால் தேவனால் மேலும் தண்டிக்கப்படுவார்கள்.
“நீங்கள் எனக்குச் செவிகொடுக்க மனதில்லாமல், எனக்கு எதிர்த்து நடப்பீர்களானால், நான் உங்கள் பாவங்களுக்குத்தக்கதாக இன்னும் ஏழத்தனை வாதையை உங்கள்மேல் வரப்பண்ணி,..” (லேவியராகமம் 26:21)
இவ்விதமாக தேவனுடைய கோபம் அவர்கள் மேலாக வரும்.
இவ்வித வாதையை யூதருக்கு வருவதைக் கண்டு அவர்களோடு இருந்தும் தேவனை அறியாத ஏனைய ஜாதிகளுக்கு ஆச்சரியமாக இருக்கும்.
பிற ஜாதிகள் பிரமிப்பார்கள். “நான் தேசத்தைப் பாழாக்குவேன். அதிலே குடியிருக்கிற உங்கள் சத்துருக்கள் பிரமிப்பார்கள்” (லேவியராகமம் 26:32)
இன்னும் பல வாதைகளை தேவன் அவர்களுக்கு செய்வேன் என எச்சரிக்கின்றார்.
இவை பிற தேசங்களில் நடக்கும் போது அவர்களுடைய தேசமான இஸ்ரேல் தேசம் ஓய்வாக இருக்கும்.
அவர்கள் தங்கள் தேசத்திற்கு ஓய்வு கொடுக்காதபடியினால் இப்போது ஓய்வடைந்திருக்கும்.
“நீங்கள் உங்கள் சத்துருக்களின் தேசத்தில் இருக்கும்போது, தேசமானது பாழாய்க்கிடக்கிற நாளெல்லாம் தன் ஓய்வுநாட்களை இரம்மியமாய் அநுபவிக்கும். அப்பொழுது தேசம் ஓய்வடைந்து, தன் ஓய்வுநாட்களை இரம்மியமாய் அநுபவிக்கும். நீங்கள் அதிலே குடியிருக்கும்போது, அது உங்கள் ஓய்வு வருஷங்களில் ஓய்வடையாதபடியினால், அது பாழாய்க்கிடக்கும் நாளெல்லாம் ஓய்வடைந்திருக்கும்.” (லேவியராகமம் 26:34-35)
இவ்விதமாக தேவனின் கோபத்தினால் அவர்கள் புற தேசங்களில் தங்கியிருப்பதோடு அங்கு நிம்மதியற்ற வாழ்க்கையை வாழ்வர்.
அத் தேசத்தார்கள் அவர்களுக்கு எதிராக காரியங்களை செய்வார்கள். இவ்விதமான காரியம் வேதாகமத்தில் 6,000 ஆயிரம் வருடங்களுக்கும் முன்னராகவே மோசேயினால் இஸ்ரவேல் மக்களுக்கு அறிவிக்கப்பட்டது.
இது மோசேயினுடைய வார்த்தைகள் அல்ல. தேவனால் மோசேயினூடாக அறிவிக்கப்பட்டது.
பரிசுத்த வேதாகமத்தில் இந்த வார்த்தைகள் காணப்படுகின்றன.
தேவன் தம்முடைய ஜனங்களுக்கு இவ்விதமாக அவர்கள் தேவனை மறந்து போனால் இவ்வாறு நடைபெறும் என கூறியிருந்தார்.
பல முறை அவர் தம்முடைய மக்களை எச்சரிக்க பல தீர்க்கர்களை இஸ்ரவேலிலே எழும்பப்பண்ணினார்.
வேதாகமத்தில் வருகின்ற அனைத்து தீர்க்கர்களும் இஸ்ரவேலிலேயே எழும்பியுள்ளனர்.
இஸ்ரவேல் தேசத்திலிருந்து வராத எவரும் கடவுளுடைய தீர்க்கதரிசிகள் அல்லவென்பது இதன் மூலமாக தெளிவாகும்.
இயேசுக்கிறிஸ்து எனும் தேவனுடைய மாம்ச வெளிப்பாடானது இஸ்ரவேல் தேசத்திலேயே வெளிப்பட்டது.
ஏனெனில் தேவன் தம் கட்டளைகளை மக்களுக்கு கொடுத்து அவர்கள் அதினை கடைபிடிக்க தடுமாறும் போது தேவன் அவர்கள் மேல் இரக்கங் கூற வேண்டியதாக இருந்தது.
ஓரே உயிருள்ள ஜீவனாகிய இஸ்ரவேலரின் தேவனாகிய கர்த்தர் ஆபிரகாமின் தேவனாக இருந்தார்.
ஆபிரகாமோடு பேசியவர் ஈசாக்கோடு பேசினார். யாக்கோபோடு பேசினார். மோசேயோடு பேசினார். இன்றும் அவர் பேச வல்லராக இருக்கின்றார்.
ஏனெனில் ஜீவனுள்ள தேவனுடைய சத்தத்தைக் கேட்கக்கூடிய ஒரு ஜாதி இஸ்ரவேல் ஜாதி மட்டுமே. அந்த ஜாதியை ஏற்றுக்கொள்ளும் ஏனைய ஜாதிகளுக்கும் அந்த சந்தர்ப்பம் இலவசமாக வழங்கப்படுகின்றது.
இஸ்ரவேல் ஜாதியாரை எந்த ஜாதி ஏற்றுக் கொள்ளுகின்றதோ அந்த ஜாதிகள் அவர்கள் மூலமாக ஆசீர்வாதத்தை பெறுகின்றன.
அன்று ஆபிரகாமுக்கு ஆசீர்வாதத்தை தேவன் கட்டளையிட்டபோது அவனது சந்ததியாருக்கும் அந்த ஆசீர்வாதம் கடந்து வருகின்றது.
ஆபிரகாம் மரித்துப் போனான். அவனது சந்ததிகளும் மரித்துப் போயினர்.
தற்போது ஆபிரகாமின் புதிய சந்ததியினர் ஈசாக்கின் மூலமாக யாக்கோபின் மூலமாக இன்றும் இஸ்ரவேல் தேசத்தில் குடியிருக்கின்றனர்.
அவர்கள் தங்கள் தேவனை பின்பற்றியபடியினால் மீண்டும் தங்கள் தேசங்களிற்கு தேவனால் கொண்டுவரப்பட்டுள்ளனர்.
அதினால் தான் எந்த ஒரு நாடும் அவர்களுக்கு எதிராக எந்த சூழ்ச்சியையும் மேற்கொள்ள முடியாதிருக்கின்றது.
1948ம் ஆண்டு தொடக்கம் இன்று வரை பல நாடுகள் அவர்களுக்கு எதிராக உள்ளன.
எதிராக உள்ள நாடுகள் இன்று இஸ்ரவேலரின் தேவனுக்கு எதிராகவே உள்ளன.
இஸ்ரவேலரது இறைவனுக்கு பிரியமான வாழ்க்கையின் காரணமாக இஸ்ரவேலரை மேற்கொள்ள முடியவில்லை.
இஸ்ரவேலரின் வெற்றியின் இரகசியமானது அவர்களது பெலனல்ல. அமெரிக்காவின் உதவிகள் அல்ல.
மாறாக அவர்களது ஜீவனுள்ள தேவனின் மேலான அவர்களது நம்பிக்கையே.
உலக நாடுகள் கைவிடலாம். அமெரிக்கா கைவிடலாம். ரஷ்யா தனது படைகளை எதிர்காலத்தில் இஸ்ரவேலில் கொண்டு வந்து நிறுத்தலாம்.
ஆனால் ஜீவனுள்ள தேவனின் பலத்த கரம் அவர்களோடு இருந்தால்… ஜீவனின் அதிபதியான உலகத்தின் மீட்பராம் இயேசுக்கிறிஸ்துவின் பிதாவான பரலோக தேவனுக்கு முன்பாக இஸ்ரவேல் எனும் தேசம் ஒரு போதும் எந்த எதிரிகளின் மூலமாகவோ அசைக்கப்படாது.
தேவனுடைய பலத்த கரமே இஸ்ரவேலருக்காக யுத்தம் செய்யும். இஸ்ரவேலர் எழும்பும் முன்னரே தேவனாகிய கர்த்தர் அவர்களுக்காக அவர்களது எதிரிகளை முறியடிப்பார்.
உலகமோ அல்லது சாத்தானோ இஸ்ரவேலை ஒன்றும் செய்ய முடியாது. உலகத்திலுள்ளவர்களை விட எங்கள் தேவன் பெரியவர் என்று இஸ்ரேல் சொல்லுகிறது.
“தேவன் மனுஷனைப் பூமியிலே சிருஷ்டித்த நாள்முதல், உனக்கு முன் இருந்த பூர்வநாட்களில், வானத்தின் ஒருமுனை தொடங்கி அதின் மறுமுனைமட்டுமுள்ள எவ்விடத்திலாகிலும் இப்படிப்பட்ட பெரிய காரியம் நடந்ததுண்டோ, இப்படிப்பட்ட காரியம் கேள்விப்பட்டதுண்டோ.
அக்கினியின் நடுவிலிருந்து பேசுகிற தேவனுடைய சத்தத்தை நீ கேட்டதுபோல, யாதொரு ஜனமாவது கேட்டதும் உயிரோடிருந்ததும் உண்டோ, அல்லது உங்கள் தேவனாகிய கர்த்தர் எகிப்திலே உங்கள் கண்களுக்கு முன்பாக உங்களுக்குச் செய்தபடியெல்லாம் தேவன் அந்நிய ஜாதிகளின் நடுவிலிருந்து ஒரு ஜனத்தைச் சோதனைகளினாலும், அடையாளங்களினாலும், அற்புதங்களினாலும், யுத்தத்தினாலும், வல்லமையுள்ள கரத்தினாலும், ஓங்கிய புயத்தினாலும், மகா பயங்கரமான செயல்களினாலும், தமக்கென்று தெரிந்துகொள்ள வகைபண்ணினதுண்டோ என்று நீ விசாரித்துப்பார்.
கர்த்தரே தேவன், அவரையல்லாமல் வேறொருவரும் இல்லை என்பதை நீ அறியும்படிக்கு, இது உனக்குக் காட்டப்பட்டது.
உன்னை உபதேசிக்கும்படிக்கு, அவர் வானத்திலிருந்து தமது சத்தத்தை உனக்குக் கேட்கப்பண்ணி, பூமியிலே தமது பெரிய அக்கினியை உனக்குக் காண்பித்தார்.
அக்கினியின் நடுவிலிருந்து உண்டான அவருடைய வார்த்தைகளைக் கேட்டாய். அவர் உன் பிதாக்களில் அன்புகூர்ந்தபடியால், அவர்களுடைய பின்சந்ததியைத் தெரிந்துகொண்டு, உன்னிலும் பலத்த பெரிய ஜாதிகளை உனக்கு முன்னின்று துரத்தவும், உன்னை அழைத்துக்கொண்டுபோய், இந்நாளில் இருக்கிறதுபோல, அவர்கள் தேசத்தை உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கவும், உன்னைத் தமது முகத்துக்குமுன் தமது மிகுந்த வல்லமையினால் எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினார்.
ஆகையால், உயர வானத்திலும் தாழ பூமியிலும் கர்த்தரே தேவன், அவரைத் தவிர ஒருவரும் இல்லை என்பதை நீ இந்நாளில் அறிந்து, உன் மனதிலே சிந்தித்து, நீயும் உனக்குப் பின்வரும் உன் பிள்ளைகளும் நன்றாயிருக்கும்படிக்கும், உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு என்றைக்கும் கொடுக்கிற தேசத்திலே நீ நீடித்த நாளாயிருக்கும்படிக்கும், நான் இன்று உனக்குக் கற்பிக்கிற அவருடைய கட்டளைகளையும் அவருடைய கற்பனைகளையும் கைக்கொள்ளக்கடவாய் என்றான்”.
(உபாகமம் 4:32-40)
Subscribe to:
Posts (Atom)
9198181602

Register and get $5 Cash today! Extra rewards will come with my Invitation Code: VQDNCUBKQ! http://goalonapp.com/gogoal/index.html
VQDNCUBKQ!

Hey, use my McMoney referral code during registration and get an extra bonus! My code is: P2R3N7VC Download the app here: www.mcmoneyapp.com
P2R3N7VC

Hey, use my MoneySms referral code during registration and get an extra bonus! My code is: 161108E7A7 Download the app here: www.moneysmsapp.com

Contact Form
Sri Lanka Tamil Typesetting, English to Tamil Translation, Sinhala to Tamil Translations, Type setting, Book Printing,, Page maker, Corel draw, Mobile: +94 775076775 & ezcash, http://tamiltranslation.tk/, https://sites.google.com/view/typesettingintamil94775076775, https://uyir.business.site/, https://tamiltypesetting.godaddysites.com, සිංහල, ඉංග්රීසි සිට දෙමලට පරිවර්තනය .. சிங்களம், ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பு சேவை .. Tamil Translations, from Sinhala & English, with Typesetting, from Colombo. மொபைல் +94775076775, ( hezron libn, lipni22, libni hezron, lipni, uyir, uyiron ) . . http://tamil.cf . Christian . . . http://tamil.gq . Tamil . . . http://lipni-hezron.tk . Sri Lanka . . . http://libni-hezron.tk . News . . . http://libnihezron.tk . Net . . . http://libni.tk . google . . . http://lipni.tk . USA . . . http://uyir-tamil.tk . UK . . . http://lipni-tamil.tk . Tamil . . . http://tamiltranslation.tk . search . . . http://tamiltranslation.ml . Tamilchristian . . . http://tamiltranslation.ga . lanka . . . http://tamiltranslation.cf . Sri . . . http://tamiltranslation.gq . blog . . . http://clj2c.tk . new . . . http://lankatour.tk . like . . . http://tammil.tk . page . . . http://tammil.ml . free . . . http://tammil.ga . link . . . http://tammil.cf . corona . . . http://tammil.gq . usd . . . http://pasikudahtours.tk . paypal . . . http://christiantamil.tk . money . . . http://uyirchristian.tk . translate . . . http://christianlk.tk . Work . . . http://uyir.tk . end . . . http://uyirchristiannet.tk . time . . . . . http://contact.tammil.co . ministry . . . http://facebook.tammil.co . facebook . . . http://Youtube.tammil.co . yourtube . . . http://main.tammil.co . tammil . . . http://paypal.tammil.co . paypal . . . http://Publication.tammil.co . book . . . http://twitter.tammil.co . Twitter . . . http://top-up.tammil.co . reload . . . Christian . . Tamil . . Sri Lanka . . News . . Net . . google . . USA . . UK . . Tamil . . search . . Tamilchristian . . lanka . . Sri . . blog . . new . . like . . page . . free . . link . . corona . . usd . . paypal . . money . . translate . . Work . . end . . time . . . . ministry . . facebook . . yourtube . . tammil . . paypal . . book . . Twitter . . reload
No one has commented yet. Be the first!